செல்லையா கிருஷ்ணராஜா. யாழ்ப்பாணம்: பிறைநிலா வெளியீடு, 2ஆம் கலட்டி ஒழுங்கை, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில், 1வது பதிப்பு, புரட்டாதி 2012.(கொழும்பு 6: AB Creator and Publishers, 8A-4/2, புகையிரத நிலைய வீதி, வெள்ளவத்தை).
viii, 744 பக்கம், விலை: ரூபா 1500.,அளவு: 24.5×18 சமீ., ISBN: 978-955-4568-02-0.
கி.பி.1500 ஆண்டுகள் வரை இலங்கையில் காணப்பட்ட வரலாறு, கலை, கலாச்சாரம், அரசியல், சமயங்களின் வளர்ச்சி, போன்றவற்றின் உண்மைத்தன்மையின் அடிப்படையிலான ஒரு பண்பாட்டு வரலாற்றுத் தொகுப்பு இந்நூலாகும். முன்னர் ஆசிரியரால் எழுதப்பட்ட இலங்கை வரலாறு-பாகம் 1 என்ற நூலினைத் தளமாகக் கொண்டு இந்நூல் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. 15 இயல்களில் எழுதப்பட்ட இந்நூலில் வரலாற்றின் பொருள் விளக்கமும் பரப்பும் நோக்கமும் அணுகுமுறையும், இலங்கை வரலாற்றைக் கற்பதற்குரிய மூலாதாரங்கள், வரலாற்றுக்கு முற்பட்ட காலச் சமூகங்களின் இருப்பும் பண்பாடும், பெருங்கற்கால இலங்கையும் பண்பாடும், புராதன நதிக்கரையோர நாகரிகங்களும் இலங்கையின் நீரியல் நாகரிகத்துடனான பண்பாட்டு வழித் தொடர்புகளும், விலங்கு வேளாண்மைக் குதிரைக் குழுமங்களின் வருகையும் கீழைத்தேயத்தில் அவர்களது குடியேற்ற நடவடிக்கைகளும், ஆக்ககால இலங்கையின் அரசியல், பண்பாடு (பௌத்த மதத்துடன் இணைந்த பெருங்கற்காலம்), ஒருமைய அரசின் பரிணாமமும் பன்மத சமூக நிறுவனங்களின் எழுச்சியும் (ஆக்ககால வளர்ச்சி தொடர்பான சாசனவியல் மூலங்கள் ஊடான சிறப்பாய்வு), நிலப் பிரபுத்துவ சமூகமும், அரசின் மேனிலையாதிக்கமும் (தேரவாத பௌத்த பீடங்களின் பண்பாட்டுச் செல்வாக்கு), நிலப்பிரபுத்துவ சமூகமும் அரசின் மேநிலை ஆதிக்கமும் (இந்துமதம் மற்றும் மகாயான பௌத்தபீடங்களின் பண்பாட்டுச் செல்வாக்கு), இராசரட்டை நாகரீகத்தின் வீழ்ச்சியும் தென்மேற்கு, வடக்கு, கிழக்க நோக்கிய அரசியல் பண்பாட்டுப் புலப்பெயர்ச்சியும், அரசியற் கோட்பாடுகளும் வெளிநாட்டுக் கொள்கைகளும் (அநுராதபுரம், பொலநறுவைக் காலங்கள்), அரசியற்கோட்பாடுகளும் வெளிநாட்டுக் கொள்கைகளும் (தென்மேற்கு, வடகிழக்கு இடப்பெயர்வுக் காலங்கள்), இலங்கை கலை மற்றும் இலக்கிய வளர்ச்சிப் பாரம்பரியம் (சிங்களப் பௌத்தப் பண்பாடு), இலங்கையின் கலை மற்றும் இலக்கிய வளர்ச்சிப் பாரம்பரியம் (இந்து திராவிடப் பண்பாடு) ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.