டில்ருக்ஷி பொன்சேகா (ஆங்கில மூலம்), நவாலியூர் நடேசன்; (தமிழாக்கம்). கொழும்பு 6: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, (ஆண்டு விபரம் தரப்படவில்லை). (கொழும்பு 13:யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
x, 29 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அனுசரணையுடன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கோட்பாட்டு நிபுணத்துவம் பெற்ற ஐவரின் பங்களிப்புடன் ஆங்கில மூலத்தில் எழுதப்பட்ட ஐந்து நூல்களில் ஒன்று இதுவாகும். இந்நூலில் ஒரு சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப் படுத்துகை பற்றி நாம் என்ன அர்த்தம் கொண்டுள்ளோம், யுத்தகாலத்தில் சாதாரணமாக நிகழும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளையும் அதன் அர்த்தத்தையும் நாம் எவ்வாறு விளங்கிக்கொள்ளலாம்/விளக்கலாம், சமாதான நிகழ்வுத் தொடர்களில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப் படுத்துகையை மேம்படுத்துவதற்கு தடைகள் என்ன?, இலங்கையில் பால்நிலை சார்ந்த பிரச்சினைகளுக்கான உபகுழு சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப் படுத்துகைக்கு எதிரான சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளும்? இலங்கையில் சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த விடயம் பற்றி நாம் என்ன முடிவுகளுக்கு வரலாம்? ஆகிய ஐந்து கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கான தெளிவான கருத்துக்கள் பதிலாக வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40415).