சாந்தி சச்சிதானந்தம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 8: முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி செயல் முன்னணி, 159 கின்சி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1991. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).
x, 112 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21×14 சமீ.
ஜனவரி 1990, 19ஃ21ம் திகதிகளில் கொழும்பில் இடம்பெற்ற தமிழில் எழுதும் பெண் எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு. அன்பெரியா ஹனீபாவின் வரவேற்புரையுடன் தொடங்கிய இக்கருத்தரங்கு ஆறு அமர்வுகளில் இடம்பெற்றுள்ளது. தமிழ் இலக்கியமும் பெண்களும்: சில சவால்கள் (மௌ.சித்திரலேகா), காண்பதும் கேட்பதும்: வெகுஜனத் தொடர்பு சாதனங்களில் பெண்களின் உருவகங்கள் (சாந்தி சச்சிதானந்தம்), பால் அடிப்படையில் அமைந்த தொழிற் பாகுபாடு (மௌ.சித்திரலேகா), வெளிநாட்டுச் செலாவணிச் சம்பாத்தியத்தில் பெண்களின் பங்களிப்பும் சமுதாயத்தில் அவர்கள் பெறும் கணிப்பும் (சிரோன்மணி இராஜரத்தினம்), பெண்களும் இம்சையும்: ஒரு கலந்துரையாடல் (யோகா பாலச்சந்திரன்) ஆகிய ஐந்து கட்டுரைகள் ஐந்து அமர்வுகளிலும் வாசிக்கப்பட்டதையடுத்து அமர்வு ஆறு குழுநிலை விவாதமாகவும், வினா விடை நிகழ்வாகவும் அமைந்தது. இவை அனைத்தும் இத்தொகுப்பில் எழுத்துருவில் இடம்பெற்றுள்ளன.