எஸ்.அரசரெத்தினம். கல்முனை 02: எஸ்.அரசரெத்தினம், ராஜ்பதி, வ.வி.ரோட், 1வது பதிப்பு, ஜுலை 2004. (கல்முனை: குட்வின் ஓப்செட் அச்சகம்).
v, 105 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14.5 சமீ.
இலங்கையின் அரசியல் வரலாறு, பன்னிரெண்டாவது பாராளுமன்றக் கலைப்பு, பதின்மூன்றாவது பொதுத் தேர்தலும் பங்குபற்றிய கட்சிகளும், மாவட்டங்களும் வேட்புமனுக்களும், தேர்தல் விஞ்ஞாபனங்களும் பிரச்சாரங்களும், வாக்களிப்பு முறையும் அங்கத்தவர் தெரிவும், தேர்தல் முடிவுகளும் காரணங்களும், புதிய அரசாங்கமும் பொறுப்புகளும் ஆகிய எட்டு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் முன்னதாக வளமான வாழ்வைத் தேடி, விழிகளால் கதைகள் பேசி, இலங்கைப் பாராளுமன்ற அரசியலும் பன்னிரெண்டாவது பொதுத் தேர்தலும் ஆகிய நூல்களை எழுதியவர். இது இவரது நான்காவது நூலாகும். தீவிர வாசிப்புத் தேடல் கொண்ட நூலாசிரியர் அரச வங்கியொன்றின் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50523).