எஸ்.நடேசன். கொழும்பு 2: சாந்தி வெளியீடு, 71, மலே வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1971. (கொழும்பு: நேரு அச்சகம்).
56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 16.5×10.5 சமீ. மலையக மக்களின் தொழிற்சங்கத் தலைவரும் சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான தோழர் எஸ்.நடேசன் எழுதி அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளையும், பொது மேடையில் நிகழ்த்திய உரைகளையும் உள்ளடக்கியுள்ள தொகுப்பு இதுவாகும். தமிழ் மக்களின் எதிர்காலம், தொழிற்சங்க இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் தோட்டத் தொழிலாளரும், தோட்டப்பாடசாலைகள், நானறிந்த இராஜலிங்கம், மேதினம் ஆகிய ஆறு கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது.