நா.மகேசன். அவுஸ்திரேலியா: நா.மகேசன், ஓம் முருகா கழகம், சிட்னி, 3வது பதிப்பு, 2014,1வது பதிப்பு, மார்கழி 1998, இணையப் பதிப்பு, செப்டெம்பர் 2006. (அச்சகவிபரம் தரப்படவில்லை).
(8), 72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
சென்னையில் 14.7.2014 இல் அமரரான திருமதி ஜானகி ஆனந்தவேலு ஆரணி, அவர்களின் நினைவாக மீள்பதிப்புச் செய்யப்பட்டுள்ள இந்நூலின் மூல ஆசிரியர் நாகலிங்கம் மகேசன் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவின் நியு சவுத்வேல்ஸ் பிரதேசத்தில் வாழ்ந்துவருபவர். சைவ சமயத்தவர் பின்பற்றும் இறுதிச்சடங்கு நடைமுறைகளை புலம்பெயர் தேச அனுபவங்களைக் கருத்திலெடுத்து இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார். சடங்குகளுடன் தொடர்புள்ள பிரார்த்தனைப் பாடல்களும் தரப்பட்டுள்ளன.