9357 சீராக்கம் வேண்டாமா?

ஆ.கந்தையா. நுகேகொடை: கலாநிதி ஆ.கந்தையா, சிரேட்ட விரிவுரையாளர், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம். நாவலை, 1வது பதிப்பு, மார்ச் 1988. (சென்னை 2: காந்தளகம், 834, அண்ணாசாலை).

(4), 41 பக்கம், விலை: இந்திய ரூபா 25., அளவு: 21.5×17.5 சமீ., ISBN: 955- 95173-1-7.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணங்க தமிழ்நாட்டில் 13 தமிழ் எழுத்துக்கள் சீராக்கஞ்செய்யப்பட்டன. அந்த எழுத்துக்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டில் அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுத்தது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரிலும் இச்சீராக்கம் நடைமுறைக்கு வந்தது. இலங்கையிலும் மலேசியாவிலும் இச்சீராக்கம் பற்றிய கருத்துவேறுபாடுகள் இடம்பெற்றதால் நடைமுறைக்கு வரத் தாமதமாயிற்று. இந்நிலையில் நவீன கணனியுகத்தில் இத்தகைய சீராக்கத்தின் முக்கியத்துவத்தை ஆராய்ந்து சீராக்கத்தின் அவசியம் பற்றி இந்நூல் குறிப்பிடுகின்றது. வரலாற்றுப் பின்னணி, பதின்மூன்று எழுத்துக்களின் சீராக்கம், தமிழ்நாட்டில், சிங்கப்பூரில், இலங்கையில், மலேசியாவில், ஏனைய நாடுகளில், முடிவுரை, குறிப்புகள், ஆகிய 9 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பழைய வடிவமும் புதிய வடிவமும் பற்றிய பின்னிணைப்பும் நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ளது. இந்நூல் பின்னர் 1990இல் இரண்டாவது பதிப்பாக அவுஸ்திரேலியா, சிட்னியிலிருந்து நடனாலய வெளியீடாகவும் வெளியிடப்பட்டது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 80739).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

What Are Innovative Technologies?

Innovative technologies are the latest developments in tools, methods and systems that increase productivity & efficiency. They can result in innovations in a variety of