சு.ஞானப்பிரகாசர். யாழ்ப்பாணம்: ஞானப்பிரகாசர் ஆச்சிரமம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1973. (யாழ்ப்பாணம்: அர்ச். சூசைமாமுனிவர் அச்சகம்).
vi, 80 பக்கம், புகைப்படத் தகடு, விலை: ரூபா 3.00, அளவு: 18.5×12.5 சமீ.
பன்மொழிப் புலவர், நல்லூர்ச் சுவாமி சு.ஞானப்பிரகாசர் அவர்கள் எழுதிப் பிரசுரமான தமிழ் மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு. இந்நூலில் தமிழும் ஆரிய மொழிகளும், தமிழில் உள்ள நிறச் சொற்கள், பூனையும் பூசையும், பனையின் பெயர்கள், ஏடர்- இண்டர் (அண்டர்)-இடையர், தமிழிற் சகர முதற் சொற்கள், பொய்யும் மெய்யும், தமிழ்ப் பாஷையின் விசித்திரங்கள், இலங்கைக் கத்தோலிக்க மிஷனரிமாரும் தமிழும், குடஞ்சுட்டு ஆகிய பத்து தமிழியல் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28856).