அ.குமாரசுவாமிப் புலவர் (உரையாசிரியர்), தி.இராசகோபாலன் (பதிப்பாசிரியர்). சென்னை 600005: ஐந்திணைப் பதிப்பகம், 279, பாரதி சாலை, திருவல்லிக்கேணி, அஞ்சல் பெட்டி 2989, 1வது பதிப்பு, டிசம்பர் 2000. (சென்னை 5: மணி மறுதோன்றி அச்சகம்).
xxii, 212 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 17.5×12 சமீ. யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர் 1903இல் எழுதிய தண்டியலங்காரத்துக்கான உரையின் மீள் பதிப்பு இதுவாகும். பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பிரிவாக தண்டியலங்காரத்தின் மூல நூல் இருந்தது. அந்நூலுக்கான உரையை குமாரசுவாமிப் புலவரவர்கள் 1903இல் இராமநாதபுரம் பொ.பாண்டித்துரைத் தேவரவர்களின் விருப்பத்திற்கிணங்க எழுதிப்பிரசுரித்திருந்தார். தமிழகத்திலிருந்து புலவர் தி. இராசகோபாலன் மீளப் பதிப்பித்துள்ள இந்நூல், யாழ்ப்பாணத்துப புலவரின் படைப்பினை தமிழக வாசகருக்கு அறிமுகப்படுத்துகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 152789).