கிருஷ்ணபிள்ளை விசாகரூபன். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகம், 56/5, மணல்தறை ஒழுங்கை, கந்தர்மடம், 1வது பதிப்பு, 2007. (யாழ்ப்பாணம்: ஸ்மார்ட் பிரின்டர்ஸ், 717, காங்கேசன்துறை வீதி).
(3), 50 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 17.5×12.5 சமீ.
யாப்பியலில் ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா என்ற நால்வகைப் பா மரபுகளுண்டு. தமிழ் இலக்கண மரபில் கலி என்பது பாடல்கள் அமையும் ஒரு யாப்பு முறையாகும். கலி என்பதற்கு ஓசை மிகுதி எனவும் பொருள்கொள்வர். இதனால் கலிப்பா என்பது ஓசை நயம் மிக்க பாடல் எனப்படும். இந்நூலில் கலிப்பா பற்றிய பொது அறிமுகம் முதலாம் இயலிலும், கலிப்பா வகைகளும் அவற்றின் வடிவ அமைப்பும் இரண்டாவது இயலிலும் விளக்கப்பட்டுள்ளன. இவ்வியலில் தொல்காப்பியமும் கலிப்பாவும், ஒத்தாழிசைக்கலி, கலிவெண்பாட்டு, கொச்சகக் கலிப்பா, உறழ்கலிப்பா ஆகிய பாவகைகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இறுதியாக அமையும் மூன்றாவது இயலில் கலிப்பாவும் அதன் பிற்கால மாற்றமும் பற்றி விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 205787).