9378 யாப்பிலக்கணம். விசாகப் பெருமாளையர்.

யாழ்ப்பாணம்: நா.பொன்னையா, திருமகள் நிலையம், மயிலிட்டி தெற்கு, 2வது பதிப்பு, 1954, 1வது பதிப்பு, 1938, (சுன்னாகம்: தனலக்குமி புத்தகசாலை).

(4), 56 பக்கம், விலை: 60 சதம், அளவு: 18.5×12.5 சமீ.

யாப்பிலக்கணம்.

விசாகப் பெருமாளையர் (மூலம்), நா.பொன்னையா (பதிப்பாசிரியர்). சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 3வது பதிப்பு, 1962, 1வது பதிப்பு, 1938, 2வது பதிப்பு, 1954. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

(2), 56 பக்கம், விலை: 75 சதம், அளவு: 18.5×12.5 சமீ.

இந்நூல் 19ம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த வித்துவமணி திருத்தணிகை விசாகப் பெருமாள் ஐயர் அவர்களால் வினா-விடை வடிவில் இயற்றப்பட்டது. யாப்பிலக்கணம் கற்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் அமைந்த இந்நூல் தமிழகத்தில் பல பதிப்புகளைக் கண்டது. யாழ்ப்பாணம், ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினரால் நடத்தப்படும் பிரவேசப் பரீட்சைக்கு ஆயத்தஞ்செய்யும் இலங்கை மாணவர்களுக்கேற்ற வகையில் சில திருத்தங்களைச் செய்துவைத்திருந்த மா.பீதாம்பரம்பிள்ளை அவர்களது வேண்டுகோளின்படி அத்திருத்தங்களுடன் 1938இல் ஈழகேசரி அதிபர் நா.பொன்னையா அவர்கள் இந்நூலின் முதற்பதிப்பை இலங்கையில் தனது பதிப்பகத்தின்மூலம் வெளியிட்டார். அதன் மூன்றாவது பதிப்பே இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 98030).

ஏனைய பதிவுகள்

16079 சைவப்பிரகாசிகை. ச.குமாரசுவாமிக் குருக்கள்.

அச்சுவேலி: ஆசிரியர் சங்கம், சரஸ்வதி வித்தியாசாலை, 1வது பதிப்பு, பங்குனி 1933. (சுன்னாகம்: திருமகள் அச்சியந்திரசாலை). (4), 127 பக்கம், விலை: 40 சதம், அளவு: 19×14 சமீ. விநாயகக் கடவுள்-1, விநாயகக் கடவுள்-2,