அனிஸ்டஸ் ஜெயராஜா. கொழும்பு 6: பூங்காற்று பதிப்பகம், Green Breeze Publishers, 59,1/1, Highlevel Road, Kirulapane, 1வது பதிப்பு, பெப்ரவரி 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xii, 72 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 19×13 சமீ.
இது இலங்கையில் 2004 மார்கழியில் ஏற்பட்ட சுனாமி பற்றியதொரு அனுபவ கதையாடல். 2005ஆம் ஆண்டின் முற்பகுதியில் முன்னாள் அமைச்சராகவிருந்த நஜீப் மஜீத் அவர்களின் மேலதிக செயலாளராகவிருந்த அல்ஹாஜ் செய்யது அஹமட் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது அமைச்சகத்திலிருந்து ஆசிரியரால் பெறப்பட்ட பத்திரிகைச் செய்திகள், ஆவணங்களிலிருந்து தேர்ந்த குறிப்புகளின் அடிப்படையில் நூலாசிரியரினால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அன்றையதினம் இறந்துபோன அனைத்து ஆத்மாக்களுக்கும் சமர்ப்பணமாக்கப்பட்ட இந்நூலின் தொடக்கமே “சுனாமி என்றால்… ஊழல், லஞ்சம், களவு, பொய்ப்பித்தலாட்டம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மிருகத்தனம், சுரண்டல், வியாபாரம், மோசடி, அராஜக மற்றும் ஏமாற்று அரசியல் இன்னோரன்ன…” என்று தொடங்குகின்றது.