9447 இருதய நோய்களும் தடுக்கும் முறைகளும்.

ச.இராசரத்தினம். யாழ்ப்பாணம்: ச.இராசரத்தினம், பிரசாந்தி, கொக்குவில், 1வது பதிப்பு, நவம்பர் 1976. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்).

24 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 21.5×14 சமீ.

டாக்டர் ச.இராசரத்தினம் இலங்கை அரசினர் வைத்தியசேவையிலிருந்து ஓய்வுபெற்றவர். ‘தாயும் பிள்ளையும்’ என்ற நூலின் ஆசிரியர். ஈழநாடு வார இதழில் தொடராக வெளிவந்த இருதய நோய் பற்றிய கட்டுரையின் நூல்வடிவம் இதுவாகும். ஒருவரை இருதய நோய்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய வாழ்க்கை முறைகளையும் உணவு வகைகளையும் நோய்களையும் இந்நூல் விபரிக்கின்றது. இந்நூலின் விற்பனை நிதி முழுமையாக திருநெல்வேலியில் கட்டப்பட்டு வந்த பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா பிரார்த்தனை மண்டபத்திற்கு வழங்கப்படும் என்ற குறிப்பும் நூலில் காணப்படுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 102383).

ஏனைய பதிவுகள்

14626 நிறம் பூசும் குழந்தைகள் (கவிதைகள்).

ஏ.எம்.சாஜித் அஹமட். அக்கரைப்பற்று: பெருவெளி பதிப்பகம், 31/C, உப தபாலக வீதி, பதுர் நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (அக்கரைப்பற்று: சிற்றி பொயின்ட்). (20), 40 பக்கம், விலை: ரூபா 200., அளவு:

16725 அம்மாவின் பிள்ளைகள்: குறுநாவல்கள்.

குரு அரவிந்தன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2019. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆப்செட்). xiv, 192