அ.சின்னத்தம்பி, தி.இராஜேந்திரன். யாழ்ப்பாணம்: காங்கேசன்துறை வைத்திய வெளியீடு, காங்கேசன்துறை, 1வது பதிப்பு, 1983. (காங்கேசன்துறை: சந்திரா அச்சகம்).
(2), 42 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 10., அளவு: 18.5×12.5 சமீ.
பேராசிரியர் அ.சின்னத்தம்பி, வைத்திய கலாநிதி தி.இராஜேந்திரன் ஆகியோர் எழுதிய இந்நூல் அயன மண்டல நச்சுப்பாம்புகள் பற்றியதாகும். சித்தவைத்தியர்களிடமும் பொதுமக்களிடமும் நச்சுப் பாம்புகள் பற்றியும் அவற்றினால் தீண்டப்பட்டால் மேற்கொள்ளவேண்டிய அவசர சிகிச்சை பற்றியும் போதிய அறிவை வளர்க்கும் நோக்கில் எழுதப்பட்டது. ஏற்கெனவே காங்கேசன்துறை வைத்திய வெளியீடுகள் தொடரில் அறுவை வைத்திய நலம் பேணற் கைநூல் என்ற தலைப்பிலான நூல் ஒன்று வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 114761).