நிமால் சேனநாயக்கா (சிங்கள மூலம்), அரியராணி அரியரத்தினம் (தமிழாக்கம்). இரத்மலான: சர்வோதய விஸ்வலேகா வெளியீடு, 41, லும்பினி அவென்யூ, 1வது பதிப்பு, 2000. (இரத்மலான: சர்வோதய விஸ்வலேகா அச்சகம், 41, லும்பினி அவென்யு).
xiv, 123 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ., ISBN: 955-599-209-6).
எப்பிலெப்சி எனப்படும் காக்கை வலிப்பு பற்றிய மருத்துவ விளக்கத்தை வழங்கும் நூல். பேராதனைப் பலகலைக்கழக மருத்துவ பீடத்தின் தலைவரான பேராசிரியர் நிமல் சேனநாயக்கவின் ஆங்கில, சிங்கள நூலின் தமிழாக்கம் இதுவாகும். தமிழ் மொழிபெயர்ப்பாளர் கொழும்பு மருத்துவபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராவார். நூலின் கருத்தை எளிதில் விளங்கிக்கொள்ள ஜயஸ்ரீ சேமகேயின் கருத்தோவியங்கள்; உதவுகின்றன. இந்நூல் நோயின் மருத்துவ நோக்கத்தைவிட கூடுதலாக, அதன் சமூக, கலாச்சார, உளவியல் பாதிப்புக்களை அதிகம் விளக்கி தீர்வுகாண விளைகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 131301).