ஓ.கே.குணநாதன். அவுஸ்திரேலியா: பாடும் மீன் பதிப்பகம், 1, Petra Court, Epping, Victoria 3076, இணை வெளியீடு, மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, மார்கழி 2004. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).
106 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 955-8715-20-4.
25ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ள நூல். 2004ம் ஆண்டிற்கான இலங்கை சாஹித்திய மண்டலப்பரிசு பெற்ற சிறுவர் இலக்கியநூல் இது. ஓ.கே.குணநாதனின் சிறுவர் நாவல்களில் பெரும்பாலும் சிறுவர்களே பாத்திரங்களாக அமைகின்றார்கள். எமது சமூகத்திலே காணப்படும் சில கொடுமைகளையும் சிறுவர்களுக்குச் செய்யப்படும் அநீதிகளையும் எதிர்த்துப் போராடுகின்றார்கள். துணிகரமான செயல்களைப் புரிகின்றார்கள். வெற்றிபெறுகின்றார்கள். இந்த நாவலும் அத்தகையதொன்றே. ஒரு கதையை எழுதி அதற்குப் பல முடிவுகளைக் கொடுத்து சிறுவர்களைச் சிந்திக்க வைக்கவும், சுயமாகத் தீர்மானங்களை எடுக்கவைக்கும் வகையிலும் எழுதியிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 217249).