தி.சுதாகர். வவுனியா: தி.சுதாகர், 117/1, மில் வீதி, உக்குளாங்குளம், 1வது பதிப்பு, மார்கழி 2004. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
xix, 76 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 120., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 955-98993-0-9.
எண்ணங்களை எளியநடையில் துல்லியமாக புதுக்கவிதை வரிகளில் வடித்திருக்கிறார். இதிலுள்ள சில புதுக்கவிதைகளின் சொற்சேர்க்கைகள், சொல்லடுக்குகள், என்பன சந்தங்களுக்கு அப்பால் நிற்கும் ஆத்ம உயிர்ப்புத் தடமாகின்றன. யதார்த்தங்கள் சில கவிதைகளில் தத்ரூபமாக வெளிக்காட்டப்பட்டுள்ளன. வாழ்வில் வெறுப்புற்றவராகச் சில கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன. சமூக மாற்றத்துக்கான அறைகூவலாகவும் வாசிப்போருக்கு நம்பிக்கையும் உற்சாகமும் தருவதாகவும் இக்கவிதைகள் இருந்திருப்பின் மேலும் வாசகரைக் கவர்ந்திருக்கும். இந்நூலுக்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி விரிவான அணிந்துரை வழங்கியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 188850).