9559 அங்கவை கவிதைகள்.

அங்கவை.(இயற்பெயர்: அருணாசலம் கணேசாள்). கொழும்பு 10: கவிதா பப்ளிக்கேஷன்ஸ், 27-2/2, ஜயந்த வீரசேகர மாவத்தை, 1வது பதிப்பு, மே 1975. (அச்சக விபரம் தரப்படவில்லை).

128 பக்கம், விலை: ரூபா 4.75, அளவு: 17.5×12.5 சமீ.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 1975 மே 30, 31ம் திகதிகளில் நடத்தும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான எழுத்தாளர் மாநாட்டின் நினைவையொட்டி வெளியிடப்படும் நூல். ஈழத்துக் கவிதை உலகில் கடந்த 20 வருடங்களாகத் தடம்பதித்துவந்த வைத்திய கலாநிதி  (செல்வி) அருணாசலம் கணேசாள் அவர்களின் கவிதைகள் இவை. வாழ்த்துப் பாடல்கள் 11, தத்துவப் பாடல்கள் 14, கலையுலகம் சார்ந்த பாடல்கள் 14, பல்சுவைப் பாடல்கள் 14, மெல்லிசைப் பாடல்கள் 9 என மொத்தம் 62 பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 87001).

ஏனைய பதிவுகள்

11096 பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம்: இரண்டாம் பாகம்.

ஸ்ரீநீலகண்ட சிவாசாரியார் (வடமொழி மூலம்), காசிவாசி. செந்திநாதையர் (தமிழாக்கம்). தேவிகோட்டை: ஸ்ரீ அரு. சோமசுந்தரஞ் செட்டியார், 1வது பதிப்பு, வைகாசி 1908. (தமிழ்நாடு: செந்திநாதசுவாமி யந்திரசாலை, திருமங்கலம்). 185-400 பக்கம், விலை: இந்திய ரூபா