9562 இடம்பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய். யோ.புரட்சி.

கொழும்பு 6: மலையக வெளியீட்டகம், இல.57, மஹிந்த பிளேஸ், 1வது பதிப்பு, வைகாசி 2013. (கிளிநொச்சி: கரிகணன் பதிப்பகம், இல. 175ஏ, கரடிப்போக்குச் சந்தி).

xii, 76 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-9084-26-6.

வலிகள் நிறைந்த வரிகளாக அமைகின்றது  இக் கவிதைத் தொகுப்பு. இனிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற அளவில் போர்க்கால பதிவுகளும் அவைசாராத பிற கருப்பொருள்களில் அமைந்த கவிதைகளுமாக 50 தலைப்புகளில் பல்வேறு விடயங்களை தன் கவிதையின் களமாக்கியிருக்கின்றார். பிறப்பு, திருமணம், முதல் பிரசவம், தாய், தந்தை, கல்லறை என்று மனித தத்துவத்தை விளக்கும் வகையில்  கவிதைகளைக் கோர்வைப்படுத்தியிருக்கிறார். இக்கவிதைகள் பல்வேறு ஊடகங்களிலும் முன்னதாக வெளிவந்து கவன ஈர்ப்பைப் பெற்றவை. பல கவிதைகள் புனர்வாழ்வு முகாம்களிலும் தடுப்பு முகாம்களிலும் வைத்து இவரால் எழுதப்பெற்றவை. முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளுவர்புரம் கிராமத்தைச் சேர்ந்த புரட்சி, வள்ளுவர்புரம் பாரதி மகாவித்தியாலயத்தில் கல்விகற்றவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 233314).

ஏனைய பதிவுகள்