மு.நல்லதம்பி. வட்டுக்கோட்டை: வட்டுக்கோட்டை இளைஞர் மன்றம், 1வது பதிப்பு, 1958.(யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).
ix, 115 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
வட்டுக்கோட்டை முதுதமிழ்ப்புலவர் மு.நல்லதம்பி அவர்கள் எழுதிய பாடல்களின் தொகுப்பு. அச்சமற்ற வாழ்வையும், மேலோர் நச்சிடும் பண்பையும் உண்மையின் உயர்வையும் இளைஞர்கள் வாழ்வின் குறிக்கோளாகக் காத்திடல் வேண்டும் என்கிறார். கவிஞர்களின் வறுமையைக் கோடிட்டுக்காட்டும் இவர் புலவர்க்குதவிய அன்புள்ளம் கொண்ட செல்வந்தர்களையும் மறந்துவிடவில்லை. புலவரவர்கள் காலத்திற்கு ஏற்ற இனிய சந்த அமைப்புகளோடு உரிய சொற்களால் இயற்கையின் எழிலைக் குழைத்து உயரிய செய்யுள்களாக இவற்றை ஆக்கியிருக்கின்றார். இந்நூலுக்கு விரிவான முகவுரையொன்றினை பண்டிதர் க.மயில்வாகனனார் வழங்கியிருக்கிறார். பேராதனை இலங்கைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் சிறப்புப் பாயிரம் பாடியிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39327).