நெடுந்தீவு லக்ஸ்மன் (இயற்பெயர்: நா.இலட்சுமணராசா). நெடுந்தீவு 10: நெடுந்தீவு லக்ஸ்மன், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2003. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
xii, 68 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 17×12 சமீ.
வரண்ட பூமியான நெடுந்தீவு, ஆயுத கலாசார அரசியல்போக்கால் இருண்டதீவாக விளங்கிய ஒரு காலத்தில் நெடுந்தீவு பற்றிய செய்திகளை ஊடகங்கள் மூலம் வெளியுலகிற்குத் தெரியப்படுத்துவதற்காகத் துணிச்சலோடு பணியாற்றிய ஒரு சிலருள் நெடுந்தீவு லக்ஸ்மன் முக்கியமானவர். சிறந்த கவிஞரான இவரது கவிதைகளிலும் தான் சார்ந்த தமிழ்ச் சமூகத்திற்காக ஒரு செய்தி சொல்லும் பாங்கும் காணப்படுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 151651).