ஏ.பீ.சம்சுனா. சம்மாந்துறை: வாழும் கலை இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (சாய்ந்த மருது: டிசைன் வேர்ள்ட்).
xxiii, 84 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-44015-0-1.
அன்புள்ள அன்னைக்கு என்ற தலைப்பில் தொடங்கி, உன் பெயர் குறிக்கும் எழுத்துக்களில் என்ற தலைப்புக் கவிதை ஈறாக 32 கவிதைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. பல காதல் கவிதைகளுடன், அன்னை, கிராமம், பெண், சீதனம், பள்ளிக்கூடம், கண்ணீர் என வேறும்பல உணர்வுக்கவிதைகளையும் வடித்திருக்கிறார். ஆதம்பாவா சம்சுனா, மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியில் பயின்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியில் இளம் கலைமாணித் தேர்வை பூர்த்திசெய்தவர். சம்மாந்துறையில் தன் ஆசிரியப்பணியை மேற்கொள்கின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 238063).