என்.சுந்தா. மன்னார்: என்.சுந்தரராஜன், 1வது பதிப்பு, மார்ச் 2010. (மன்னார்: ஸ்கை பிரின்டர்ஸ், புனித செபஸ்தியார் வீதி).
xix, 180 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 320., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-97603-2-0.
காதற் கவிதைகளால் அத்திவாரம் கொண்டு காதற் கற்களால் எழுந்து நின்று தன்னுள் காதற் கவிதைகளை ஓவியமாய்த் தீட்டி அழகுபடுத்திக்கொண்ட காதற் கோட்டை இந்த கவிதைத் தொகுப்பு. காரிகையர் கண்கள் அழகானவை. இளைய மகளிர் இளமை துள்ளியோடும் கண்கள் ஓரவீச்சுக்கள் சுகம் இனிமையானது. கடைக்கண் வீச்சு உதிர்ந்த அந்தக் காரிகையர் குறும்புச் சிரிப்பும் அழகானது. இவற்றில் தொக்கிநிற்கும் உணர்வுகளும் இனிமையானவை. மொத்தத்தில் ஓரவிழி வீச்சு என்பது இனிமையானது. இதனால் இத்தொகுப்பு அழகாக ‘உன் ஓரவிழி வீச்சிலிருந்து’ எனவானது. போர்க்களம் கண்ட ஒரு மண்ணிலிருந்து முகிழ்ந்துள்ள வித்தியாசமான மலர் இந்நூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 216742).