யோ.புரட்சி. கொழும்பு 6: இலண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம், 9-2/1, நெல்சன் இடம், 1வது பதிப்பு, மாசி 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 681, காங்கேசன்துறை வீதி).
x, 54 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-41105-0-2.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளுவர் புரம் கிராமத்தில் பிறந்தவர் யோகநாதன் புரட்சி. இவர் வடித்த 50 கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. கவிதை வடிக்கப்பட்ட காலம், இடம், நேரம் என்பவற்றையும் பாடலுடன் இந்நூலில் குறித்து ஒரு பதிவுப்புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார். இவரது பாடல்கள் சில தமிழக பின்னணிப் பாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் குரலில் ஒலிப்பதிவாகியுமுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 236572).