அஷ்ரஃப் சிஹாப்தீன். வத்தளை: யாத்ரா, 37, ஸ்ரீ சித்தார்த்த மாவத்தை, மாபோளை, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2008. (கொழும்பு 14: டலன்ட் கிராப்பிக்ஸ், 83B, பாபாபிள்ளை வீதி)
xxiv, 102 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 18×13 சமீ., ISBN: 955-8448-01-4.
‘காணாமல் போனவர்கள்’ என்ற கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதியுள்ள மேலும் சில கவிதைகளைக்கொண்ட இரண்டாவது கவிதைத் தொகுதி இதுவாகும். யாத்ரா- கவிதை இதழின் ஆசிரியரான இவர், துணிச்சல் மிக்கவொரு கவிஞராக ஈழத்துத் தமிழ் பேசும் மக்களிடையே கருதப்படுபவர். ஈழத்து முஸ்லிம்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் இவரது கவிதைகள் சிறப்பானவை. பேச்சுவார்த்தைகள் தொடங்கி அந்த நினைவு வரையிலான 50 கவிதைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 219427).