எஸ்.பாயிஸா அலி. கிண்ணியா: கிண்ணியா நெட் வெளியீட்டகம், குறிஞ்சாகேணி 03, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ்).
90 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-54284-0-8.
கிண்ணியாவிலிருந்து முகிழ்ந்துள்ள பெண்கவிஞர் ஒருவரின் நவீன கவிதைகள். கவிதைக்குத் தேவையான பொருத்தமான வார்த்தைகளை மட்டும் தேர்ந்து பயன்படுத்தியிருப்பது அவரது விரிந்த தமிழறிவுக்குச் சான்றாகின்றது. மரபுக் கவிதை மன்னர்கள் நிறைந்த ஒரு மண்ணிலிருந்து அதே செழுமையுடன் நவீன கவிதை வடிவத்தில் பிரகாசிக்கிறார் பாயிஸா அலி.