வாகரைவாணன். யாழ்ப்பாணம்: வாகரை வாணன், பூம்பொய்கை, இணுவில் கிழக்கு, இணுவில், 1வது பதிப்பு, மார்ச் 1983. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்).
(6), 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
வாகரைவாணனின் கவிதைகள், மனித குலம், மனித வாழ்வு, மானிட ஒற்றுமை என்றவாறான மானிடத்தை நோக்கிய சிந்தனைகளாக விரிகின்றன. கடவுளுக்கு ஒரு கடிதம், வானம் ஒரு சட்டி, கன்னியர்க்கினிய கச்சான் காற்றே, பாரதிக்கு நூற்றாண்டாம், கிண்ணமும் ஏந்துவான் கீதையும் பாடுவான், சூறாவளியே நீ சுகம்தானா?, அன்னை நாடு, விருட்சங்களுக்கும் வியர்க்கும், எட்டையபுரத்து இடி, கடற்கரைப் பூக்கள், கடவுளே, பொங்கலாம் பொங்கல், சோசலிச சுகம், தைப்பாவை, இந்த மனிதர்கள் இப்படித்தான் ஆகிய தலைப்புகளில் இம்மரபுக் கவிதைகள் விரிகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 120913).