9584 கடலின் கடைசி அலை: கவிதைத் தொகுதி.

பொலிகையூர் சு.க.சிந்துதாசன். உடுப்பிட்டி: அலைகரை வெளியீடு, ஆகாயம் பதிப்பகம், இமையாணன், 1வது பதிப்பு, நவம்பர் 2013. (நெல்லியடி: தமிழ்ப் பூங்கா பதிப்பகம்).

128 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-44886-0-1.

ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில் (2009) வன்னியில் வாழ்ந்த ஆசிரியர் முன்னதாக ‘ஓரிடம்’ என்ற கவிதைத் தொகுதியை 2004இல் வெளியிட்டவர். கடலின் கடைசி அலை என்ற இத்தொகுதியில் இவரது 53 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஈழத்துக் கவிதைகளின் அகநிலைச் சித்திரிப்பாக இவை அமைந்துள்ளன. போரினால் ஏற்பட்ட மனித அழிவுகள், அலைக்கழிவுகள், சிறுமைகள், சிதைவுகள் பற்றிப் பேசுகின்றன. மொத்தத்தில் மரணத்துள் வாழ்ந்து மீண்ட ஒரு கவிஞனின் காயங்களை இத்தொகுதி பதிவுசெய்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 234488). 

ஏனைய பதிவுகள்

Rozrywka Komputerowa

Content Które to Kasyna Przez internet Znajdują się Ustawowe W naszym kraju? | dowiedz się tutaj teraz Uciechy Dotykowe Na przykład, jakąś wraz z głównych