ம. யாழ் ஆன்சிலின். கிளிநொச்சி: தமிழ்த் தாய் வெளியீடு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (கிளிநொச்சி: நிலா பதிப்பகம்).
(20), 97 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 125., அளவு: 21.5×14.5 சமீ.
மிருசுவில் வடக்கு திரு ம.ஆன்சிலின் அவர்களின் முதலாவது கவிதைத் தொகுப்பு. ஒரு போராளியின் வாக்குமூலம் என்பதில் தொடங்கி பதவிகள் ஈறாக 50 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கவிதைத் தலைப்புகள் பெரும்பாலும் சுருக்கமாக, குப்பிகள், கண்ணீர், கொடுமைகள், தோழர்கள், மீட்போம், புத்தன், துரோகம், விழிகள் என ஒற்றைச்சொற்களில் அமைக்கப்பட்டிருந்தாலும், அச்சொற்களின் ஆழம் கவிதைகளை வாசிக்கும்போது தெளிவாக-அழுத்தமாகப் புரிகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 150943).