கண்ணையா (இயற்பெயர்: முனிசாமி இராமையா). வவுனியா: முத்தமிழ்க் கலாமன்ற வெளியீடு, 1வது பதிப்பு, மாசி 1993. (வவுனியா: வல்லிபுரம் பிரின்டிங் வேர்க்ஸ்).
(10), 46 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 20×13.5 சமீ.
வன்னி மண் தந்த இக்கவிஞர் 20.10.1942இல் பிறந்தவர். வவுனியா பல நோக்கு கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளராகப் பணியாற்றியவர். வவுனியா ஓயார் சின்னக்குளத்தைச் சேர்ந்தவர். 1962 முதல் கவிதைகளை படைக்கத் தொடங்கிய இவர், பத்திரிகைகள், லண்டன் பீ.பீ.சி. தமிழோசை, இலங்கை வானொலி, வெரித்தாஸ் வானொலி ஆகியவற்றில் இவர் எழுதி வழங்கி அவ்வப்போது ஒலிபரப்பான 46 கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 156245).