சுசி தமிழினி. (இயற்பெயர்: நா.யோகராஜா). யாழ்ப்பாணம்: நா.யோகராஜா, சிவமஹால், மாலி சந்தி, கரவெட்டி, 1வது பதிப்பு, ஜுலை 1982. (யாழ்ப்பாணம்: தமிழ்ப் பூங்கா அச்சகம், நெல்லியடி-கரவெட்டி).
40 பக்கம், விலை: ரூபா 4.00, அளவு: 18×12.5 சமீ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வணிகத்துறை இறுதி வருட மாணவரான நா.யோகராஜா, வடமராட்சியின் கரவெட்டியைச் சேர்ந்தவர். புதுமைக் கருத்துக்களையும், புதிய உலகத்தையும் அவாவிநிற்கும் கிருதயுகக் கவிஞர். நிறுத்திய சிந்துகள் சமகால ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தை நன்கு பிரதிபலிப்பதாக அமைகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 85108).