அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை. யாழ்ப்பாணம்: அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை, 30, கடைச்சாமி வீதி, நீராவியடி, 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: கங்கை பிரின்டர்ஸ், 781, சிவலிங்கப்புளியடி, காங்கேசன்துறை வீதி).
viii, 148 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.
பாடசாலைகளில் நாடகத்தை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை எழுதிய ஐந்து நாடகங்களையும், 7 கட்டுரைகளையும், இலட்சியத்தை அடைதல் என்ற தலைப்பிலான ஒரு சிறுகதையினையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. ஆசிரியரின் 28ஆவது நூல் இதுவாகும். நாடகங்கள் யாழ்ப்பாணத்துப் பிராந்திய பேச்சு வழக்கில் அமைந்துள்ளன. சமூகப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டும் கருப்பொருளைக் கொண்டவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 233162).