க.கயிலாயநாதன். வட்டுக்கோட்டை: க.கயிலாயநாதன், கந்த கோட்டம், 1வது பதிப்பு, 1986. (காரைநகர்: பாலா அச்சகம்).
(5), 88 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 18×12.5 சமீ.
க.கயிலாயநாதன் (1922-1993) ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கதொரு படைப்பாளியாக வாழ்ந்து மறைந்தவர். வட்டுக்கோட்டை கலாநிலைய முதல்வராகவும், இலங்கைக் கல்விச் சேவையில் பாடசாலை அதிபராகவும், பலாலி ஆசிரியர் கலாசாலையில் ஆங்கில விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். ஷேக்ஸ்பியரின் அவலச்சுவை நாடகமான ஒதெல்லொ (Othello) என்ற நாடகக்கதையைக் கருவாகக் கொண்டு, தமிழ் மரபிற்கும் தற்காலத்திற்கும் ஏற்றவாறு மாற்றியமைத்து இலக்கியச் செழுமையுடன் இந்நாடகத்தை எழுதியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 116082).