ஜுனைதா ஷெரீப். (இயற்பெயர்: கே.எம்.எம்.ஷெரீப்). காத்தான்குடி: கே.எம்.எம்.ஷெரீப், 1வது பதிப்பு, மே 1988. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்).
153 பக்கம், விலை: ரூபா 23.00, அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 955-95096.
இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்ட வானொலி நாடகத் தொகுப்பு. இலங்கை அரசின் சாஹித்திய மண்டலப் பரிசுபெற்றநூல். வானொலி மேடை நாடகங்கள் எழுதுவது எப்படி என்ற கட்டுரையை முதலாவது இயலில் வழங்கி, அடிமை, சக்கரம் சுழல்கிறது, பொன்னாடை, இப்படியும் மனிதர்கள், கனவுகள் கலைக்கப்படுகின்றன, மிச்சம் ஒரு எச்சம், வழிகாட்டி, பெரிய மனிதன், கபுறு வெட்டி ஹயாத்து ஆகிய ஒன்பது மேடை நாடகங்களைத் தொடர்ந்து இடம்பெறச் செய்துள்ளார். 1967 முதல் நூற்றுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதி இலங்கை வானொலியில் ஒலிபரப்பியவர் ஜுனைதா ஷெரீப். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84114).