9661 ஆணிப்பொன்: சிறுகதைத் தொகுப்பு.

கல்குடா க.பரமானந்தராஜா. மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2009. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).

141 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-8715-55-0.

அவன் இவனில்லை, ஆறாத ரணங்கள், எனக்கு மட்டும், விடிவில்லா மனங்கள், தவறுகள் திருத்தப்படுகின்றன, ஒரு விடிவெள்ளி உதயமாகின்றது, தாய்மை, ஆணிப்பொன், இனிவரும் உதயம், வெள்ளைப்புறா ஒன்று, சாம்பல் மேட்டில் பூத்த அத்திவாரங்கள், தாயகம், நினைவே நீ கலையாதே, வீடு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 14 கதைகள் இதில் அடங்கியுள்ளன. கிழக்கிலங்கையின் கல்குடாவைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர். கிழக்குப் பல்கலைக் கழகத்தித்தின் கலைமாணிப் பட்டதாரி. கல்குடா தொகுதியில் உள்ள மயிலங்கரச்சை மலைமகள் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றுகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 212815).

ஏனைய பதிவுகள்