9668 ஈழத்துச் சிறுகதைகள்.

சிற்பி (இயற்பெயர்: சி.சரவணபவன்) (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: தமிழருவிப் பதிப்பகம், கந்தரோடை, 1வது பதிப்பு, 1958. (சென்னை: மாருதி அச்சகம், 83, பீட்டர்ஸ் ரோடு, இராயப்பேட்டை).

162 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18×12.5 சமீ.

கடற்கரைக் கிளிஞ்சல்கள் (இலங்கையர்கோன்,ஈழகேசரி-1954), வெள்ளம் (இராஜ அரியரத்தினம், ஈழகேசரி-1944) மனிதன் (க.தி.சம்பந்தன், கலைமகள்-1950), குருவின் சதி (தாழையடி சபாரத்தினம்,ஆனந்தன்-1954), அவன் (க.இராஜநாயகன், மறுமலர்ச்சி-1948), ஒரு பிடி சோறு (கனகசெந்திநாதன்,ஈழகேசரி-1945), பிள்ளையார் கொடுத்தார் (வரதர், ஆனந்தன்-1953), தோணி (வ.அ.இராசரத்தினம்,ஈழகேசரி-1954), வாழ்வு உயர்ந்தது (சகிதேவி தியாகராஜா,சுதந்திரன்-1955), கங்காகீதம் (சி.வைத்தியலிங்கம்,கிராம ஊழியன்-ஆண்டு?), உப்பிட்டவரை (கே.டானியல்,சுதந்திரன்-1954), பதவி துறந்தார் (செ.கணேசலிங்கன்-புதிய கதை) ஆகிய 12 சிறுகதைகளின்; தொகுப்பு. ஈழத்தின் படைப்பாளிகளின் கதைகளை மாத்திரம் உள்ளடக்கி வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாக இது ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. நூலின் இறுதியில் கதாசிரியர்கள் பற்றிய குறிப்புகளும் தொகுப்பாசிரியரால் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18412).

ஏனைய பதிவுகள்