9694 நந்தியின் சிறுகதைகள்.

நந்தி (மூலம்), தே.தேவானந்த் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: புனைவகம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xx, 460 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0350-07-0.

நந்தி என்ற புனைபெயரின் வழியாக ஈழத்து புனைவிலக்கிய உலகில் நன்கு அறியப்பெற்றவர் பேராசிரியர், வைத்திய கலாநிதி அமரர் செல்லத்துரை சிவஞானசுந்தரம் (30.3.1928-4.6.2005). அவர் எழுதிய 49 சிறுகதைகளையும் தனி நூலாகத் தொகுத்து இப்பெருநூல் வெளிவந்துள்ளது. பின்னிணைப்புகளாக, ஊர்நம்புமா, கண்களுக்கு அப்பால், நந்தியின் கதைகள், தரிசனம் ஆகிய நந்தியின் நான்கு சிறுகதைத் தொகுதிகள் தொடர்பாக வெளிவந்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. நந்தி பற்றிய நினைவலைகள் என்ற இறுதிப் பிரிவில், இறப்பு என்பது முடிவல்ல(கார்த்திகேசு சிவத்தம்பி), புனைகதை இலக்கியத்துக்குப் புகழ்சேர்த்த படைப்பாளி (என்.சோமகாந்தன்), பல்துறை பேரறிஞர் பேராசிரியர் சிவஞானசுந்தரம் (மயிலங்கூடலூர் பி.நடராசன்) ஆகிய தலைப்புகளில் நந்தியின் ஆளுமை பற்றி எழுதப்பெற்ற மூன்று படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Casino Action

Content An irgendeinem ort Findet Man Einen Casino An irgendeinem ort Es Maklercourtage Für jedes 10 Einzahlen Existiert?/h2> Achten Die leser noch darauf, inwieweit gegenseitig