9711 வண்டி முன்னாக மாடு பின்னாக (உருவகக் கதைகள்).

ச.வே.பஞ்சாட்சரம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2012. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆப்செட்).

xvi, 128 பக்கம், விலை: இந்திய ரூபா 55., அளவு: 18×12.5 சமீ.

பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் அவ்வப்போது பத்திரிகைகளில் எழுதிவந்த நாற்பது உருவகக்;கதைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன.வந்தேறிகளின் வஞ்சனைகள் என்ற கதை போன்ற சமகால அரசியல் நெடிமிகுந்ததும், அவ்வரசியல் யதார்த்தங்களை நாசூக்காக உருவகப்படுத்துவதும்  இந்நூலிலுள்ள உருவகக் கதைகளின் சிறப்பாக அமைகின்றன. சமூகப் பிரச்சினைகளை விலங்குப்பாத்திரங்களின் ஊடாக அணுகியும் ஆசிரியர்  அலசியுள்ளார். சுன்னாகம், இணுவில் மேற்கைச் சேர்ந்த ச.வே.பஞ்சாட்சரம் தனது 23ஆவது வயதில் (1962) பாடிய எழிலி என்ற காவியத்துக்காக 1965இல் சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றவர். யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியராக இருந்த வேளையில் தொன்னூறுகளில் தனக்கென இலக்கிய வேட்கைகொண்ட ஒரு மாணாக்கர் பரம்பரையையே உருவாக்கியிருந்தவர்.

ஏனைய பதிவுகள்

Online casino Real money

Articles Exactly why do Gambling enterprises Provide Free online Casino games? – best live razz poker online What’s the Better Video game In order to