சி.கணேசையர் (உரையாசிரியர்), எஸ்.சிவலிங்கராஜா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தனலட்சுமி புத்தகசாலை, கலாசாலை வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2002. (யாழ்ப்பாணம்: முல்லை அச்சகம், ஆடியபாதம் வீதி).
xxx, 365 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14 சமீ.
வித்துவசிரோமணி சி.கணேசையர் உரை எழதிய அகநானூறு பாடல்களின் களிற்றுயானை நிரை என்ற பகுதியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா பதிப்பித்து இந்நூலுருவில் வெளிக்கொணர்ந்துள்ளார். ஐம்பதுகளில் ஈழகேசரி பத்திரிகையில் தொடராக எழுதப்பட்ட உரைகளின் நூலுருவே இதுவாகும்.