வெற்றிமகன் (இயற்பெயர்: வெற்றிவேல் விநாயகமூர்த்தி). மட்டக்களப்பு: முத்தமிழ்ப் பண்ணை, 2, வன்னியனார் தெரு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1993. (மட்டக்களப்பு: புனிதவளனார் கத்தோலிக்க அச்சகம்).
(8), 64 பக்கம், தகடு, விலை: ரூபா 35., அளவு: 21.5×14 சமீ.
சிலப்பதிகாரம் பற்றிய செய்யுள் இலக்கிய விமர்சனமாக இந்நூல் அமைகின்றது. சிலப்பதிகாரச் சிறப்பு, கண்ணகையும் தன்னகையும், கண் நகை, தன் நகை, கண்ணின் பெருமையில் கம்பர் காட்சி, புகார் நகரம், திருமணச் சிறப்பு, கண்ணகையின் பண்பு, அணிகலன்கள், கண்ணகையும் கோவலனும், மாதவி நடன அரங்கேற்றம், மாதவியும் கோவலனும், கண்ணகை நிலை, கணவனைப் பிரிந்த சீதையின் நிலை, சமூக நடைமுறைகள் வேறுபடுகின்றன, இந்திர விழா, கானல்வரி, கானல்வரி எதிர்ப்பாட்டு, கண்ணகை மனைக்குக் கவலையுடன், மக்கள் இலக்கியம், மதுரை நோக்கி வழிநடை, மதுரைகாண் முற்கூறு, மனம் மாற்றிய மாதவி கடிதம், மாதவி வீட்டில் மனையறம், மறுவாழ்வு, கோவலன் தன்குறைகாட்டி வருந்துதல், கண்ணகை தன்னகை, மனப்பயங்கொடா மதுரைச் சிறப்பு, சதிசெய்யும் சந்தர்ப்பம், அரசன் கட்டளை அநீதியல்ல, கோவலன் கொலை, கோவலன் கொலை கொற்றவையாக்கியது, விம்மியழும் வீரக்குரல், தன்னகை காட்டிக் கண்ணகை போட்டி, கண்ணகை தன்னகை காட்டிய நீதி, தன்னகை நிகழ்வால் கண்ணகை தெய்வம், இளங்கோவின் இனிய வேண்டுகோள், முடியுரையும் முடிவுரையும் ஆகிய தலைப்புகளினூடாக சிலப்பதிகாரக் கதை இந்நூலில் மீள்பார்வைக்குட்படுத்தப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 131114).