கே.எஸ்.சிவகுமாரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2013. (சென்னை 94: ஆதிலட்சுமி ஆப்செட்).
vi, 98 பக்கம், விலை: இந்திய ரூபா 45., அளவு: 17.5×12 சமீ.
1953களில் எழுத்துப்பணியை ஆரம்பித்து, ஊடகவியலாளர், அறிவிப்பாளர், திறனாய்வாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எனப்பல தளங்களில் இயங்கியவர் கே.எஸ்.சிவகுமாரன். 2011இல் அவர் வழங்கிய மலரும் நினைவுகள் பற்றிய பதிதையுடன் தொடங்கும் இத்தொகுப்பில், எனது நூல்கள் சிலவற்றின் அறிமுகம், எனது கவிதைகள் சில, திறனாய்வாளர் க.கைலாசபதி, சிவகுருநாதனும் நானும், ஈழத்து உடன் நிகழ்கால இலக்கியம்-சில அவதானிப்புகள், அண்மைக்கால திறனாய்வின் முக்கியத்துவம், பஹார் ஆப்தீனின் முன்னைய கதைகள், தி.ஞானசேகரனின் சிறுகதைகள், கோகிலா மகேந்திரனின் உளவியல்சார்ந்த கதைகள், மாலின் என்பவரின் கண்டனம், கொழும்பில் நான் பார்த்த மேடை நாடகங்கள், பார்வையாளர் பிரச்சினைகள், என் மனங்கவர்ந்த சில நாடகங்கள், பாதை தெரியுது பார் திரைப்படம், களிப்பூட்டல் அருவருக்கத்தக்க ஒன்றல்ல, இளங்கோவின் கவித்துவத்திலுள்ள பாவனாசக்தி ஆகிய 17 படைப்புக்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.