செ.கிருஷ்ணமூர்த்தி. கிளிநொச்சி: மகிழ் வெளியீடு, 754, கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, மார்ச் 2013. (சென்னை 600005: கருப்புப் பிரதிகள், 855, பப்பு மஸ்தான் தர்கா, இலாயிட்ஸ் சாலை, திருவல்லிக்கேணி).
135 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.
அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் ஒருவரின் கடந்தகால வாழ்க்கை நினைவுகளாக எழும் கிருஷ்ணமூர்த்தியின் எழுத்துக்கள் கலை, இலக்கியப் படைப்பாளி ஒருவரின் பார்வையாகவும், இலக்கியம் மற்றும் சினிமா சார்ந்த ரசனையாளர் ஒருவரின் சமகால வெளிப்பாடாகவும் இதிலுள்ள கட்டுரைகள் அமைகின்றன. இந்நூலில் தொலைந்துபோன நாட்கள் (மரணம் எனக்கு மிக அருகில், ஆளுக்கொரு தேதி, வீரமணி ஐயரின் முதல் மரணம்), சிந்தனைக்குச் சில (சில நடிகர்கள் நாடகம் போடுகிறார்கள், வரலாறு மறைக்கும் உண்மைகள், இயந்திரத்தோடு வாழ்தல், காணி-நிலம் வேண்டும், கொண்டாட்டங்கள்), எனது நூலகம் (லெ.முருகபூபதியின் சுமையின் பங்காளிகள், கே.எஸ்.சுதாகரின் எங்கே போகிறோம், உனையே மயல் கொண்டு, சி.புஸ்பராஜாவின் ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம், மல்லிகை 44ஆம் ஆண்டு மலர்-ஓர் பார்வை), மறைந்தும் மறையாதோர், மக்களுக்காக வாழ்ந்த மகத்தான மனிதன், சுஜாதா ஓர் எழுத்து(கனவு)த் தொழிற்சாலை), சினிமா (காமராஜ், பெரியார், காந்தி எனது தந்தை Gandhi my father, இந்தியாவின் இருண்ட பக்கங்கள் இரண்டு, தாரெ ஜமீன் பார் Taare Zameen Par, பூ, சிந்தனையில் ஊடுருவும் குறும்படங்கள், சுப்ரமண்யபுரம், தசாவதாரம்), நேர்காணல் (மணிவிழாக் காணும் முருகபூபதியுடன் நேர்காணல்) ஆகிய ஆறு பிரிவுகளில் 26 கட்டுரைகளைத் தொகுத்து ஆசிரியர் எமக்கு வழங்கியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 234957).