அனிஸ்டஸ் ஜெயராஜா. கொழும்பு 3: மில்லேனியம் வெளியீட்டகம், 417- 2/1, காலி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2001. (கொழும்பு 3: மில்லேனியம் வெளியீட்டகம், 417- 2/1, காலி வீதி).
xxiv, 9-288 பக்கம், விலை: ரூபா 245., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-8669-00-8.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவனத் தலைவரான அமரர் ஆ.ர்.ஆ.அஷ்ரஃப் (1948-2000)அவர்களின் இறுதிக்காலத்தில், இடம்பெற்ற மக்காவுக்கான அவரது பயணத்தையும் அதன் பின்னணியில் அமைந்துவிட்ட அரசியலையும் இந்நூல் விபரிக்கின்றது. நூலாசிரியர் திருக்கோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். முன்னர் 1999இல் கிழக்கின் இதயம் தேசத்தின் உதயம் என்ற தலைப்பில் அஷ்ரஃப் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.