சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்). யாழ்ப்பாணம்: பரமேஸ்வரா கல்லூரி இயக்குநர் சபை வெளியீடு, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1976. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).
viii, (2), 76 பக்கம், தகடுகள், விலை: ரூபா 2.75, அளவு: 21.5×14 சமீ.
சேர். பொன்னம்பலம் இராமநாதனின் 125ஆவது ஜயந்தி தினத்தை முன்னிட்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. 1973இல் ஈழநாடு வார இதழில் “ஈழத்துச் சனகர்” என்ற தலைப்பில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைத்தொடர், சேர். பொன் இராமநாதனின் வாழ்;க்கை வரலாறு பற்றிய பல செய்திகளைக் கொண்டுள்ளது. அக்கட்டுரைத் தொடரின் புதுக்கிய பதிப்பாக- தனிநூலாக இது வெளிவந்துள்ளது. இராமநாதன் இலங்கையின் ஈடில்லாப் புதல்வன், இராமநாதனின் பாரம்பரியம், பிறப்பு வளர்ப்பு, இராமநாதன் கற்ற கல்வியும் கல்வி வழிகாட்டிகளும், இராமநாதன் நியாயவாத, சட்ட நிரூபணசபை உறுப்பினர், இராமநாதனின் ஆத்மஞானம், இராமநாதனின் கல்விப் பணிகள், இராமநாதனின் வாழ்க்கைத் துணைவி, இராமநாதனின் குணநலன்களும் பல்துறை ஆற்றல்களும், சமகாலப் பெரியோர்கள், இராமநாதன் வாழ்த்தும் வாக்கும், ஆகிய 10இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளதுடன் நூலின் இறுதியில் இராமநாதன் இயற்றிய நூல்கள் பற்றிய பட்டியலும் தரப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 69501).