சே.சோமசுந்தரம்பிள்ளை, சு.சிவபாதசுந்தரம் (மூலம்), வடகோவை அ.சிவகுருநாதன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சபாபதி நாவலர் ஞாபக நிலையம், வடகோவை, 1வது பதிப்பு, ஜனவரி 1955. (சென்னை: வித்தியாநுபாலன யந்திரசாலை, நெ. 300, தங்கசாலை வீதி).
(2), 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
சபாபதி நாவலரின் மருமகனாகிய வடகோவை அ.சிவகுருநாதன் அவர்களால் பதிப்பிக்கப்பெற்ற இந்நூலில், சபாபதி நாவலர் பற்றி ஸ்ரீமத் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதிய குறிப்புரையுடன் தொடங்கும் முதலாவது கட்டுரையுடன், நாவலரை நேரில் கண்டு பழகிய திருமயிலை தமிழ்ப் பண்டிதர் அமரர் சே.சோமசுந்தரம்பிள்ளை அவர்கள் எழுதிய வரலாற்றுக் கட்டுரையும், திராவிடப் பிரகாசிகைக்கு பேராசிரியர் சு.சிவபாதசுந்தரனார் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதி வழங்கப்பட்ட சபாபதி நாவலர் பற்றிய வரலாற்றுக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.