சு.துரைசிங்கம். சுன்னாகம்: பாமா வெளியீடு, 118 ஸ்ரேசன் ஒழுங்கை, சுன்னாகம் கிழக்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2008. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரின்டர்ஸ், கலாநிதி சுப்பிரமணியம் வீதி).
40 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 60., அளவு: 19.5×13.5 சமீ.
சுன்னாகம் கிழக்கு சனசமூக நிலையமும் சிவன் முன்பள்ளியும் இணைந்து வழங்கிய ஆதரவில் உருவாக்கப்பட்டது இந்நூல். வரலாற்றாய்வாளர்களின் கருத்துப்படி சுன்னாகம், கந்தரோடையில் அநுராதபுரக் காலத்திற்கு முன்பே ஒரு நாகரீக வளர்ச்சி காணப்பட்டது. ஈழத்துப் பூதன்தேவனார் தொடக்கம், உலகத் தமிழ் வளர்ச்சியில் முன்னணி வகித்தவர்கள் ஈழத்தமிழர். யாழ்ப்பாணத்து அரசகேசரி, பரராசசேகரன் போன்றோருக்கும் பின் தமிழ் வளர்த்த ஊராக சுன்னாகமே கருதப்படுகின்றது. இந்நூலில் சுன்னாகத்தின் சிறப்பும், அதன் பெயருக்குரிய காரணமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சுன்னாகம் தந்த இயற்கைப் புலவர்கள், கவிராயர்கள், பண்டிதர்கள் போன்றோரை இந்நூல் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 199041).