செ.யோகராசா. கொழும்பு 6: தமிழ்ச்சங்கம், இல.7, 57வது ஒழுங்கை, உருத்திரா மாவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை)
ii, 150 பக்கம், தகடு, விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-8564-15-8.
இலக்கிய ஆய்வாளர் வரிசையில் முக்கிய இடம்பெற்ற பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை (1899-1986) மரபுவழியில் தமிழ் இலக்கியத்தைச் செழுமைப்படுத்தியவர். அவர் பற்றிய எளிமையான அறிமுகமாக இந்நூல் அமைகின்றது. காலமும் சூழலும், வாழ்க்கை வரலாறு, இலக்கியம், சமயம், கல்வி, வகிபாகம் ஆகிய அத்தியாயங்களில் விரியும் இந்நூல் அடிக்குறிப்பு, பின்னிணைப்பு என்பவற்றையும் கொண்டது. நூலாசிரியர், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராவார். இலங்கைத் தமிழர் வாழ்வும் வகிபாகமும் தொடரில் தமிழ்ச்சங்க வெளியீடாக வரும் நான்காவது நூல் இதுவாகும்.