சி.பத்மநாதன். பேராதனை: சி.பத்மநாதன், வரலாற்றுத்துறை, இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, கார்த்திகை 1970. (யாழ்ப்பாணம்: சைவப் பிரகாச அச்சியந்திரசாலை).
111 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 21.5×14சமீ.
இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்நூலின் முதலாம் பகுதியில் வன்னியரின் தோற்றம் (இலக்கியத்தில் வன்னியர், தென்னிந்திய வரலாற்றில் வன்னியர்), தென்னகத்து வன்னிமைகள், ஈழத்து வன்னிமைகள் ஐ (தமிழ் சிங்கள அரசுகளில் வன்னிமைகள், வன்னி நாடுகளின் தோற்றம், திருமலை வன்னிமைகள், முக்குவ வன்னிமைகள்- மட்டக்களப்பு வன்னிமையும் புத்தளத்து வன்னிமையும்), ஈழத்து வன்னிமைகள் (தோற்றுவாய், அடங்காப்பற்றில் வன்னியர் குடியேற்றம்) ஆகிய நான்கு அத்தியாயங்களும், இரண்டாம் பகுதியில் பரராச சேகர மகாராசாவின் திருப்பணி கூறும் பட்டயம், கயிலை வன்னியனார் மட தர்மசாதனப் பட்டயம், நல்ல மாப்பாண வன்னியனின் ஓலை, வன்னியர் மடாலய தர்மஸாஸனப் பட்டயம் ஆகிய நான்கு அத்தியாயங்களுமாக மொத்தம் எட்டு அத்தியாயங்களில் வன்னியர் பற்றிய விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.(இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 87304).