ஏர்னெஸ்ரோ ஷே குவேரா (மூலம்), மறுமலர்ச்சிக் கழகம் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: மறுமலர்ச்சிக் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1984. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
iv, 112 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 25., அளவு: 21.5×14 சமீ.
கியுபா அமெரிக்காவுக்கு அண்மையிலிருக்கும் மத்திய அமெரிக்க நாடாகும். பல்கலைக்கழக மாணவரான பிடல் காஸ்ரோவும் அவரது நண்பர்களும் 1953இல் மொனகாடோ என்ற இடத்து இராணுவ முகாம் மீது முறையான கணிப்பீடு அற்றுத் தாக்குதல் நடத்தித் தோற்றனர். பின்னர் 1959இல் முறையான இராணுவ உபாயங்களுடன், அரசியல் தெளிவுடன் புரட்சிசெய்து இன்றைய கியுபாவை தாபித்தனர். இந்நூல் கியுபப் புரட்சி பற்றிய விரிவான தகவல்களை வழங்குகின்றது. இலங்கையில் ஆயுதப் போராட்டம் முனைப்புக் கொண்டிருந்த வேளையில் விடுதலைப் போராளிகளுக்கு அறிவூட்டும் ஒரு நடவடிக்கையாக இந்நூல் வெளியிடப்பட்டிருந்தது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 118850).