9115 இயேசுவே இறைவன்.

சிலோன் விஜயேந்திரன். சென்னை 5: சோனம் பதிப்பகம், 243 டி.எச்.ரோடு, ரத்னா கபே அருகில், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2003. (சென்னை 5: சோனம் பதிப்பகம்).

110 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 12×17.5 சமீ.

என் வாழ்வில்  இயேசு நிகழ்த்திய ஆறு அற்புதங்கள், இறைவனின் புகழ் மலர்கள், பிற்சேர்க்கை ஆகிய மூன்று பிரிவுகளை இந்நூல் கொண்டுள்ளது. முதலாவது பிரிவில் இருதய நோய்க் கொடுமையும் இறைவன் அளித்த விடுதலையும், கொடிய சர்க்கரை வியாதியிலிருந்து எனை மீட்ட இயேசு, புயல், மழையிலிருந்து எனைக் காத்த தேவன், பாம்பு கொத்தியதும் பரமன் காத்ததும், இருட்சிறையிலிருந்து மீட்ட மகிபன் இயேசு, அவளை எனக்களித்த அற்புத இயேசு ஆகிய தலைப்புகளில் இயேசு நிகழ்த்திய ஆறு அற்புதங்களை விபரிக்கிறார். இறைவனின் புகழ் மலர்கள் என்ற இரண்டாவது பிரிவில், இறைவனும் நானும், இறைவனைப் பாடுவேன், தேவ சுகம், இயேசுவை அறிவாயா?இறைவன், உயிரில் கலந்தார், நான், அழியாத ஆனந்தம், எனது ராகம் ஆகிய கிறிஸ்தவ பாடல்களைத் தருகின்றார். பின்னிணைப்பில் ஆண்டவர் இயேசுவும் மக்தலேனாவும் என்ற கட்டுரையும், சிலோன் விஜயேந்திரனின் நூற்பட்டியலும் இடம்பெறுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 151718).

ஏனைய பதிவுகள்

17303 சீத்துவக்கேடு: துலைஞ்சுபோன எங்கட வாழ்க்கை.

கந்தையா  பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரிவளவு, 1வது பதிப்பு, 2024. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், Creaze Commercial Printers, 14, அத்தபத்து ரெரஸ்). xxii, 382 பக்கம், விலை: ரூபா 3885., அளவு: